நமக்கு தெரிந்த கோவில்கள் நமக்கே தெரியாத அதிசயங்கள் -1

 1.சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள்.காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.
2. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு – தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சன்னதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.
3. திருவண்ணாமலையிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள பொன்மலைநாதர் கோயிலில் அருள்பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். சிவராத்திரியன்று விசேஷ பூஜைகள் உண்டு.
4. 108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.
5. கும்பகோணம் நல்லம் தலத்திலுள்ள ஆலயத்தில் நடராசர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இவர் கையில் ரேகையும், காலில் பச்சை நரம்பும் நன்கு தெரிகின்றன. இவரை சற்று தொலைவிலிருந்து பார்த்தால் 50 வயது முதியவர்போலவும், அருகிலிருந்து பார்த்தால் 30 வயது இளைஞர்போலவும் காட்சி தருகிறார்.
6. விழுப்புரத்தையடுத்த ரிஷிவந்தியத்திலுள்ள முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் மூலவரான லிங்கத்திற்கு தேனாபிஷேகம் நடைபெறும்போது லிங்க பாணத்தை நன்கு கவனித்துப் பார்த்தால், அம்மன் தன் கையில் கிளி வைத்துக் கொண்டு நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகத்தான் தெரியும்.
7. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலிலுள்ள உற்சவ நந்திகேஸ்வரர் அனுமன் போன்ற தோற்றத்துடன் உள்ளார். இரு கரங்களைக் கூப்பி மான், மழுவுடன் உள்ளார். மான் மழுவினை மறைத்து விட்டுப் பார்த்தால் இந்த நந்தி அனுமன் போன்றே காட்சியளிப்பார்.
8. அருப்புக்கோட்டை அருகிலுள்ளது திருச்சுழி என்ற ஊர். இங்குள்ள சிவன் கோயில் காணப்படும் நடராசர் பச்சிலை மூலிகையால் ஆனவர்.
9. தஞ்சை அருகே தென்குடித் திட்டையிலுள்ள வசிஸ்டேஸ்வரர் ஆலய கருவறை விமானம் சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. இக்கல் சந்திரனிடமிருந்து கிரணங்களைப் பெற்று நீராக்கி, அதை 24 நிமிடங்களுக்கு ஒருமுறை மூல லிங்கத்தின்மீது வீழச் செய்து அபிஷேகம் செய்கிறது. நாம் சாதாரணமாக கோயில் உண்டியலில் பணம், ஆபரணங்களைத்தான் காணிக்கையாகப் போடுவோம். ஆனால், இலங்கை கதிர்காம முருகன் ஆலயத்தில் காணிக்கையாக காசோலை (செக்) எழுதிப் போடுகின்றனர்.
10. உலகிலேயே மிகவும் உயரமான முருகன் சிலை மலேசியா நாட்டின் தலைநகரான கோலாம்பூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 140 அடி உயரம் கொண்ட சிலை இது. தமிழக சிற்பிகள் 15 பேர் சேர்ந்துதான் இச்சிலையை உருவாக்கினார்கள்.
11. திருக்கண்ணமங்கை தலத்தில் உள்ள தாயார் சன்னதியில் இரு ஜன்னல்கள் உள்ளன. இதில் தேனீக்கள் கூடு கட்டுகின்றன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வலப் பக்கம் சஞ்சாரம் செய்யும் போது தேனீக்கள் வலப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. ஆடி மாதம் முதல் மார்கழி வரை சூரியன் இடப்பக்கம் சஞ்சாரம் செய்யும் போது இடப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. இந்த அதிசயத்தை இன்றும் காணலாம்.
12. புதுக்கோட்டை மாவட்டம், பரக்கலக் கோட்டை ஆவுடையார் கோயில் திங்கட்கிழமை மட்டுமே திறந்திருக்கும். நள்ளிரவு 12.00 மணிக்கு மட்டுமே வழிபாடு. பிற நாட்களில் கோயில் மூடியிருக்கும்.
13. ராமநாதபுரத்திற்கு வடகிழக்கே பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் உள்ள அரசமரம் விழுது விடுகிறது. அதன் விழுது நிலத்தில் படிந்து மரமாகி விட்டால் மூலமரம் பட்டுப் போய்விடுமாம். பிறகு புதிய மரம் வளர்ந்து விழுது விடுமாம். இப்படி ஓர் அதிசய அரசமரம் தலவிருட்சமாக பெருமை சேர்க்கிறது.
14. திவ்யதேசமான திருவட்டாறில் சயனக்கோலத்திலுள்ள பெருமாளை மூன்று வாசல் வழியாக தரிசக்க வேண்டும். முதல் வாசலில் சிரசை தரிசிக்கலாம். இரண்டாவது வாசலில் சரீர தரிசனம் பெறலாம். மூன்றாவது வாசலில் பாத தரிசனம் பெறலாம். கேரள கோயில் என்பதால் கமகமக்கும் சந்தனத்தை அரைத்து பிரசாதமாகக் கொடுக்கிறார்கள். இங்குள்ள ஆறு வட்டமாக இருப்பதால் இவ்வூருக்கு திருவட்டாறு என்று பெயர்.
15. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் நடராஜர் சன்னதிக்கு வலப்புறம் குழந்தையை (முருகனை) இடுப்பில் ஏந்திய நிலையில் உள்ள பார்வதி அம்மனை தரிசிக்கலாம். இந்த அபூர்வக் காட்சி எங்கும் காணக் கிடைக்காதது.
16. பெரும்பாலும் கோயில்களில் எல்லாம் வெண்கலம், பஞ்சலோகம் அல்லது கற்சிலைகள் தான் இருக்கும். பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் உள்ள கிருஷ்ணர், பலராமர், சுபத்திரா உருவங்கள் மரத்தினால் ஆனவை. அரிசி, பருப்பு, காய்கறிகளைச் சேர்த்து சமைத்ததே பிரசாதமாகப் படைக்கப்படுகிறது. இதற்கு பாக் என்று பெயர்.
17. பொதுவாக ஆஞ்சநேயருக்குத் தான் வடைமாலை சாற்றுவார்கள். ஆனால் திருவையாறு தலத்தில் தெற்கு கோபுர வாசலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கு வடைமாலை சாற்றும் வழக்கம் இன்றும் நடைபெறுகிறது. சில சமயம் லட்சம் வடைகளைக் கொண்ட மாலைகள் கூட சாற்றப்படுவது உண்டு.
18. கிருஷ்ணகிரி மாவட்டம் கோட்டையூரில் நூற்றியொரு சுவாமி மலைப்பகுதியில் உள்ள ஒரு குகையில், சுமார் ஓரடி உயரமுள்ள கல் அகல்விளக்கு இருக்கிறது. இந்த விளக்கில் இளநீர் விட்டு எரித்தால், விளக்கு அழகாக எரிகிறது. இவ்வாறு விளக்கு ஏற்றுபவர்களின் குடும்பத் துன்பங்கள் நீங்கி, மனஅமைதியும் சாந்தியும் கிடைக்கிறதாம். இளநீர் விளக்கை அது இருக்கும் இடத்திலிருந்து சற்றே இடம் மாற்றினாலும் அது எரிவதில்லை என்பது ஆச்சர்யம்.

19. முருகப்பெருமானுக்கு கட்டப்பட்ட முதல் திருக்கோயில் என்ற சிறப்பை புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஒற்றைக்கண்ணூர் தலம் பெறுகிறது. முதலாம் ஆதித்த சோழன் இக்கோயிலைக் கட்டியதாகக் கூறுகின்றனர். இக்கோயிலில் முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப் பெருமான் ஒரு திருக்கரத்தில் ஜெபமாலையுடனும் மறு திருக்கரத்தில் சின்முத்திரையுடனும் இருந்து அருள்பாலிக்கிறார்.
20. ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள விநாயகபுரம் நவசக்தி விநாயகர் கோயிலின் கருவறைக்குப் பின்புறம் ஆவுடையார் லிங்கம் உள்ளது. இந்த லிங்கம் காசியில் இருந்து கொண்டுவரப்பட்டது. இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், காசியிலுள்ள லிங்கத்திற்குச் செய்த பலனாம். இதற்கு பக்தர்கள் அனைவருமே அபிஷேகம் செய்யலாம். இந்தக்கோயிலின் பாதிப்பகுதி தமிழ்நாடு எல்லையிலும், மீதிப்பகுதி ஆந்திர எல்லையிலும் உள்ளது.
21.எல்லாப் பெருமாள் கோயில்களிலும் தீர்த்தம், துளசி, குங்குமம் மட்டும்தான் கொடுப்பார்கள். ஆனால் இவற்றுடன் மிளகும் சேர்த்துக் கொடுப்பது கோவை மாவட்டம் சூலூரில் உள்ள திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலில் மட்டும்தான்.
22. நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், பாளையங்கோட்டையைக் கடந்தவுடன் ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கு தேங்காய் விடலை போட்டால், சிரட்டை (கொட்டாங்குச்சி) தனியாகவும், தேங்காய் தனியாகவும் சிதறும். இந்தப் பிள்ளையார் சிரட்டைப் பிள்ளையார் என்றே அழைக்கப்படுகிறார்.

from Blogger http://ift.tt/1LLRPl4
via IFTTT

Rakshabandhan & Srikrishna Janmashtami Greeting to all my brothers & Sisters



 “Brothers are like streetlights along the road, they don’t make distance any shorter but they light up the path and make the walk worthwhile.”


I was thrilled on getting Rakhi from many of your end, which reminded me of the day I’m with you, and also I remembered the association. 

I pray to God for smooth functioning of all of your life, for bringing cheers to your’s  family.
        Together we can and let us build a strong nation by co-ordinating efforts of each and every citizens of this great country.



   juā khelāvana kautuka kīnha sayāninha |



jīti hāri misa dehiṃ gāri duhu rāninha ||

When of God to live in fear,
Hope that prayers He’ll hear.

“O Lord this painful condition relieve,
In your abundant mercy we believe.”





Here jokes to God’s family some did give,

      Only because as intimate family to live.
Such words from devotees give pleasure a thousand fold,
To Supreme Lord, whose pastimes in works of Tulsi told.

ஸ்ரீமத் பாகவதம் சொல்லும் கண்ணனின் திருக்கதையைச் சுருக்கமாகச் சொல்லும் ஒரு சின்ன சுலோகம் இது. 


ஆதௌ தேவகீ தேவி கர்ப்ப ஜனனம்

கோபீ க்ருஹே வர்த்தனம்



மாயா பூதன ஜீவிதாபஹரணம்



கோவர்த்தனோத்தாரணம்



கம்ஸ சேதன கௌரவாதி ஹனனம்



குந்தீ ஸுதா பாலனம்


ஏதத் பாகவதம் புராண கதிதம்

ஸ்ரீ க்ருஷ்ண லீலாம்ருதம்…!





with lots of love,
Krish. Sunil Kumar, 
Social Worker
U may connect with me @ facebook : http://ift.tt/1icqWYz
U may connect with me @ twitter : https://twitter.com/kskumarji
krishnaa bless us !!…hare krishnaaaa

from Blogger http://ift.tt/1IpeJHb
via IFTTT

Happy Onam

Dear Brother/Sister,
                
Namaskar.


Ellavarkum ente hridayam niranja onashmsakal..!

Wishing you a colorful, bright, prosperous, joyous and successful Onam!




“Maveli nadu vanidum kalam
manusharellarum onnupole
amodathode vassikkum kalam
apathangarkkumottilla thanum”

I’m hoping that this Onam festival be the start of your good and prosperous life.

Keep the spirit of Onam in your hearts.

May your home be filled with joy, love and peace.

Happy Onam!
Thanks & Regards,
Krish Sunil Kumar,
Social Worker, 
Blog: Get On Hand

from Blogger http://ift.tt/1UhaOTH
via IFTTT

ஐஸ்வர்யம் பெருக வழிமுறைகள்

1. காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை தான் பார்க்கவேண்டும்.

2. குளித்தபின்பு முதுகைத்தான் முதலில் துடைக்கவேண்டும். பின்புதான், முகத்தை துடைக்கவேண்டும். குளித்தவுடன் துவட்டும்போது முதலில் மூதேவி தான் உடலில் இடம் பிடிப்பாள். பின்தான் லட்சுமி வருவாள்.
3. பூஜைகளில் அல்லது கடவுளை வணங்கும் சமயத்தில் கைலிகள் என அழைக்கபடும் லுங்கிகள் அணியக்கூடாது.

4. சாப்பிடும்போது இடதுகை எப்போதும் வட்டிலைத் தொட்டுகொண்டுதான் இருக்கவேண்டும். வட்டிலை தட்டு என்று சொல்லகூடாது. அது தட்டுபாட்டுக்கு உரிய சொல்.

5. இரவில் தயிர் சேர்த்துகொள்ளக்கூடாது. அது விஷ்ணுவானாலும் சரி, அவரை விட்டு லட்சுமி கடாக்சம் காணாமல் போய்விடும்.

6. பூஜை அறையில் அனைவரும் பழனியாண்டவர் படம் வைத்து இருப்போம். அதுவும் ராஜ அலங்காரம், அதில் சிலருக்கு ஆண்டியின் கோலமான கையேந்தும் வடிவம் இருக்கும். இதை எடுத்துவிட்டு ராஜா கைவைத்து இருப்பதுபோல் வைக்கவேண்டும்.

7. வீட்டின் வாசலை பார்த்தவாறு ஏழுமலையான் (பெருமாள்) படம் வைக்க வேண்டும். இதை பல அலுவலகங்களில் வைத்திருப்பதை நாம் இன்றும் காண முடியும்.

8. மகா சொர்ணாகர்ஷணபைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் கட்டாயம் வைக்கவேண்டும்.

9. படத்திற்க்கும் கள்ளாபெட்டிக்கும் அல்லது பீரோவிலும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும். மல்லிகை லட்சுமிக்கு விருப்பமான பூ.

10. பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.

11. திருவள்ளுவர் உருவம் பதித்த டாலர் அல்லது ஐந்து ரூபாய் நாணயம் பர்சில் வைத்திருக்க வேண்டும்.

12. லட்சுமி ,குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற வேண்டும், அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல “ஓம் ஐஸ்வரேஸ்வராய நம “என்றாவது கூறவேண்டும். இதை மல்லிகை பூ போடும் போது கட்டாயம் கூறவேண்டும்.

13. வீட்டின் முன்பு கண்திருஷ்டி படம் என்று கூறும் பூதம் படத்தை எடுத்துவிட்டு விநாயகர், முருகர் படங்களை மாட்டவும். அப்போது தான் தெய்வாம்சம் காணப்படும். அதை விடுத்து அரக்கர் படம் எல்லாம் மாட்டகூடாது.

14. விநாயகர் கோபமாக உள்ள கண்திருஷ்டி படமெல்லாம் மாட்டகூடாது.

இது எதுவுமே செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை ஒரு நாளைக்கு ஓரு முறையாவது மகான் அரங்கமகாதேசிகர் அருளிய சித்தர் மந்திரம் கூறவும். அப்போதுதான் அருள்செல்வம் முதலில் வரும். அப்புறம்தான் பொருள்செல்வம்.

ஓம் அகத்தீசாய நம!
ஓம் கரூவூர்தேவாய நம!
ஓம் போகதேவாய நம!
ஓம் கோரக்கதேவாய நம!

சபரிமலை யாத்திரைப் பலன்கள்

 
வாழ்வின் பல சிக்கல்களில் மாட்டிக் கொண்டு தினமும் அல்லல்பட்டு உழன்றுவரும் நாம் வருடத்திற்கு ஒரு முறையாவது சில நாட்களாவது தூய மனத்துடனும் மெய்யான பக்தியுடனும் நல்ல சிந்தையுடனும் மனதைக் கட்டுப்படுத்தி நோன்பிருந்து பூஜைகள், அன்னதானங்களை இயன்றவரை சக்திக்கேற்ப செய்ய நாமாக மேற்கொள்ள சபரிமலை யாத்திரை நோன்பு நமக்கு ஒரு நல்ல வாய்ப்பினைத் தருகிறது. 



எருமேலி மார்க்கமாக சபரிமலை யாத்திரை செல்வதில் மற்றொரு விசேஷம்; உடல் நலம் காக்கும் மூலிகைகளின் மணம் தாங்கி வரும் காற்றைச் சுவாசிக்கும் பேறு கிடைத்தற்கரிய ஒன்றாகும். ஆயுர்வேத சாஸ்த்திரப்படி மனித தேகத்தில் வாத, பித்த கபதாதுக்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட அளவு வரையில் இருந்தால் தேகத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும். 

அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால் வியாதிகள் உடலைத் தீண்டுகின்றன. இம்மூன்றின் தொல்லைகளைக் குணப்படுத்தும் மூலிகைகளை; எருமேலியிலிருந்து சபரிமலை வரையிலும் அதற்கப்பாலும் மண்டிக் கிடக்கின்றன. வாதரோகத்தை அடக்குவதற்கு கருங்குறிஞ்சி மூலிகை உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. 

எருமேலியிலுந்து கல்லிடும் குன்று வரையில் முக்கியமாக அழுதாநதிப் பிரதேசத்தில் இம்மூலிகைகள் நிறைந்து இருக்கின்றன. கபரோகத்தைத் தீர்க்கும் மூலிகைகள் கல்லிடும் குன்றிலிருந்து கரிமலை ஆறாவது தட்டுவரை வளர்ந்து இருக்கின்றன. அங்கிருந்து புல்மேடுவரை உள்ள சபரிமலைப் பிரதேசத்தில் பித்தரோக சமனியான மூலிகைகள் மண்டிக் கிடக்கின்றன. 

இம்மூன்று பிரதேசங்களிலும் தங்கிச் செல்பவர்கள் மேற்படி மூலிகைகளில் மணம் நிறைந்த காற்றைச் சுவாசிப்பதாலும், மூலிகைவளம் செறிந்த நீரை அருந்துவதாலும், மூலிகைகளை எரித்த சாம்பலைத் தரிப்பதாலும் ரோகங்கள் நீங்கி நல்ல ஆரோக்கியம் அடைகிறார்கள். சமவெளிப் பிரதேசமாகிய வயல் சூழ்ந்த நாட்டில் வாழும் நமக்கு படிகள் இல்லாத மலை ஏறும் வாய்ப்பு அதிகமாக கிடைப்பதில்லை. 

ஆண்டுக்கொரு முறையாவது சபரிமலைக்கு எருமேலியிலிருந்து நடந்து பெருவழிப்பாதையாக சபரிமலை சென்றுவரும் பக்தர்களுக்கு மலையேறும் நல்வாய்ப்புக் கிடைப்பதனால் அவர்களின் இதயம் பலம் பெறுகிறது. இரத்தம் சுத்தமடைகிறது. நரம்புகளும், தசை நார்களும் உறுதி பெறுகின்றன. கெட்ட உணர்வுகள் பட்டுப்போகின்றன. 

சபரிமலை யாத்திரையின்போது சாதி, சமய வேறுபாடுகள் சரணம் போட்டுப் பறக்கின்றன. ஏழை, பணக்காரர் என்ற பேதம் இல்லை. உயர்ந்தவர், தாழ்ந்தவர், படித்தவர், பாமரர் என்ற வித்தியாசம் இல்லை. எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிரை என்ற உணர்வோடும், அன்போடும், பண்போடும் மேற்கொள்கின்ற யாத்திரையே இந்த சபரிமலைப் புனித யாத்திரை. 

ஐயப்பனும் வாபர் சுவாமியும் இரண்டறக் கலந்து நின்று அருள் புரிவதைப் போலவே இஸ்லாம் மதத்தாரும் மாலை அணிந்து இருமுடிதாங்கி ஐயப்பசுவாமி கோயிலுக்குப் பெரும் திரளாக வந்திருந்து வழிபட்டு அருள் பெறுகிறார்கள். 

இதனால் இந்து, இஸ்லாம் இன ஒற்றுமை ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரோடி வளர்கின்றது. எனவே இந்த யாத்திரையின் மூலம் ஒருமைப்பாட்டு உணர்வு வளர்கின்றது. சாதி, சமய வேறுபாடுகள் வேரறுக்கப்படுகின்றன. சமத்துவம் என்பது நடைமுறையில் நடத்திக் காட்டப்படுகிறது.

from Blogger http://ift.tt/1Ltf0QS
via IFTTT

கன்னிகாதானம்

 
 உத்தர காமிக ஆகமம் 94வது படலத்தில் கன்னிகாதான முறை கூறப்படுகிறது. பிறகு எல்லா தானத்திற்கும் மேன்மையான கன்னிகாதானம் கூறுகிறேன் என்று பிரதிக்ஞை செய்கிறார் யஜமானன். ஸர்வ லக்ஷணம் உடைய தோஷம் இல்லாத வேறு கோத்திரத்தில் உன்டான தனக்கு அனுகூலமான தினத்தில் பிறந்த கன்னிகையை அவர்களுடைய தந்தையரிடம் இருந்து சொல்லப்பட்ட முறைப்படி இவர்களின் மனதை அறிந்து தனம் முதலானவற்றை கொடுத்து ஸ்வீகரித்து அவளை தன்னுடைய புத்திரியாக ஆக்கி அவளுக்கு ஸ்னாநம் செய்வித்து, சந்தனம், புஷ்பம், ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு முறைப்படி தானம் செய்யவும் என்று கன்யாதான முறை கூறப்படுகிறது. பிறகு துலாபார முறைப்படி வேதிகை குண்டம் மண்டலத்துடன் கூடிய மண்டபம் அமைத்து அதில் முறைப்படி செய்த ஹோமத்தினால் பரமேஸ்வரனை பூஜிக்கவும்.

பிறகு ஜோஸ்யரால் கூறப்பட்ட சாந்தம், சிவபக்தியுடன் கூடிய, வரனை ஈஸ்வர புத்தியோடு சந்தனம், புஷ்ப மாலைகளாலும், பஞ்சாங்க பூஷணங்களாலும் பூஜித்து அந்த வரனின் பொருட்டு வஸ்திரம் பூமி தனம், இவைகளுடன் கூடியதாகவும், வீட்டிற்கு உபயோகமான பொருளோடும், தாசி, தாசனுடன் கூடிய கன்னிகையை சிரத்தையோடு சிவனை ஸ்மரித்து கொடுக்கவும் என்று கன்னியாதான விதியில் செய்முறை விளக்கம் கூறப்படுகிறது. முடிவில் இவ்வாறு யார் கன்னிகாதானம் செய்கிறானோ அவன் கன்னிகையின் மேல் எவ்வளவு ரோமம் இருக்கிறதோ அவ்வளவு எண்ணிக்கை உள்ள நூறு வருஷம் சுகமாக இருப்பான் என்று பலஸ்ருதி கூறப்படுகிறது. இவ்வாறாக 94வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. எல்லா தானத்தை காட்டிலும் சிறந்ததான கன்யகா தானத்தை கூறுகிறேன். பிராம்மணோத்தமர்களே எல்லா லக்ஷணத்துடன் கூடியவரும் குற்றமற்றவளும்

2. வேறு கோத்ரத்தில் பிறந்தவளும் நல்ல சுப தினத்தில் பிறந்தவளுமான கன்னிகையை பணம் முதலியவைகளை கொடுத்து, பெண், மாப்பிள்ளை இவர்களின் முன்னோர் பேர்களை கூறி

3. ஒருவருக்கொருவர் மனம்புரிந்து கொண்டு பெண்ணை தன் சொந்த பெண்ணாக பாவித்து மங்கள ஸ்நானம் செய்வித்து சந்தனம், பூமாலை, ஆபரணங்கள் பட்டு புடவைகளுடனும்

4. அலங்கரித்து க்ருஹஸ்தாச்ரம தர்மத்தை அனுஷ்டிப்பதற்கு அனுகூலமாய் இருப்பதற்கு கன்யகா தானம் முறைப்படி செய்ய வேண்டும். முன்பு போல் வேதிகை மண்டலம் இவற்றுடன் கூடியதாய் மண்டபம் அமைத்து

5. அங்கு பரமேஸ்வரனை ஆராதித்து முன்பு போல் ஹோமம் செய்யவும். அமைதியானவரும் கன்யா தானத்திற்காக வரிக்கப்பட்டவரும் சிவபக்தியுள்ள வரனை

6. ஐந்து அங்கத்தின் அணிகலன்களுடன் கூடிய வரும் சந்தனம் புஷ்பமாலை இவைகளால் அலங்கரிக்கபட்டவரும் வஸ்திரம் பூமி ஐஸ்வர்யம் கூடி பரமேஸ்வரனாக பூஜித்து பாவித்து

7. வீட்டுக்கு வேண்டிய உபகரணங்களுடன் மிகவும் பொறுப்பாக வேலைகாரர்களுடன் கன்னிகையை சிவனாக பாவிக்கப்பட்ட வரனுக்கு கொடுக்க வேண்டும்.

8. பிராம்மனோத்தமர்களே! இவ்வாறாக எவன் கன்னிகா தானம் செய்கிறானோ அவனுடைய அந்த கன்னிகை சுகத்தை அடைகிறான். அந்த கன்னிகையின் சரீரத்தில் எவ்வளவு ரோமங்கள் உள்ளனவோ அந்த எண்ணிக்கையில் நூறு வர்ஷகாலம் சுகமாக இருக்கிறான்.
இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் கன்யாதானம் செய்யும் முறையாகிற தொன்னூற்றி நான்காவது படலமாகும்.

from Blogger http://ift.tt/1Ltf0QK
via IFTTT

பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பதன் ரகசியம்

 
நம் நாட்டு பெண்கள், நெற்றியில் பொட்டு அல்லது குங்குமம் வைப்பது மங்கல சின்னங்களாக கருதப்படுகிறது. இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடம் நெற்றி பொட்டு என அழைக்கப்படுகிறது. மருத்துவ ஆராய்ச்சிகளின்படி நினைவாற்றலுக்கும், சிந்திக்கும் திறனுக்கும் உரிய இடம் அதுவே. 

யோகக்கலை இதனை ஆக்ஞா சக்கரம் எனக் குறிப்பிடுகிறது. இந்த இடம் எலக்ட்ரோ மேக்னடிக் என்ற மின்காந்த அலைகளாக மனித உடல் சக்தியை வெளிபடுத்துகிறது. அதிலும், முன் நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு இரண்டும் மின்காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை. அதனால்தான், நம் மனம் கவலையால் வாடும்போது, தலைவலி அதிகமாவதை உணரலாம். நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது. 
மேலும் நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது. எனவே, நெற்றித் திலகம், நம்மை இறை அனுக்கிரகத்துடன் வாழவைப்பதுடன் தீய சக்திகள் நம்மை அணுகாமல், தீய எண்ணங்கள் நம்மில் எழாமல் காக்கிறது. நெற்றியில் திலகத்தை வைத்து கொள்ளும்போது, நான் கடவுளை எப்போதும் மனத்தில் நிலை நிறுத்துகிறேன். இறை தன்மையுள்ள இந்த உணர்வு, எனது எல்லாச் செயல்களிலும் ஊடுருவி பரவட்டும். 
என் செயல்பாடுகளில் எப்போதும், நேர்மையும் உண்மையும் நிறையட்டும், என்று பிரார்த்திக்க வேண்டும். நெற்றி திலகம் லட்சுமி கரமானது என்பர். எனவே, குங்குமம் வைக்கும் போது, ஸ்ரீயை நமஹ” என்றோ, மகாலட்சுமியே போற்றி” என்றோ சொல்லியபடி வைத்துக் கொள்வது பெண்களுக்கு நலம் பயக்கும். குங்குமத்தை மோதிர விரலால்தான் நெற்றியில் இட வேண்டும். மற்ற விரல்களை பயன்படுத்தக்கூடாது. பெண்கள், தலை வகிடிலும், மாங்கல்யத்திலும், நெற்றியிலும் பொட்டு வைக்கிறார்கள். 
இந்த மூன்று இடங்களிலுமே லட்சுமி குடியிருப்பதாக ஐதீகம். கோயில்களிலோ, வீட்டிலோ குங்குமத்தை எடுத்து இடது கையில் போட்டு கொண்டு, வலது கைவிரலால் தொட்டு வைப்பதும் கூடாது. வீட்டில் யாராவது ஒருவரை வலது உள்ளங்கையில் சிறிதளவே போட சொல்லி, வலதுகை மோதிர விரலை வளைத்து குங்குமத்தை தொட்டு நெற்றியில் இட வேண்டும்.

from Blogger http://ift.tt/1Ltf03i
via IFTTT

குழந்தைகள் படிப்பில் முன்னேற இந்த மந்திரம் கூறி வழிபட வேண்டும்

பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவான வார்த்தைகள் தான் முதல் மந்திரம். குழந்தைகளின் தன்னம்பிக்கை வளர கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லிக் கொடுங்கள்.
“”சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா”
 

காஞ்சி பெரியவரின் ஆன்மிக சிந்தனைகள்

 
காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடமாவது கடவுளை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள்.

அன்றைய நாள் நல்ல நாளாக அமையவேண்டும் என்ற இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.

புண்ணியநதிகள், கோமாதா, சிரஞ்சீவிகள், சப்தகன்னியர் ஆகியோரை குறைந்தபட்சம் ஒரு நிமிடம் நினைப்பது அவசியம்.


வாரத்தில் ஒருநாளாவது அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்யுங்கள்.

அக்கம் பக்கத்தினரையும், மற்றவர்களையும் அன்போடு நேசித்து வாழுங்கள்.

உணவு உண்ணும் முன் மிருகங்களுக்கோ, பறவை களுக்கோ சிறிது அளித்துவிட்டு பிறகு சாப்பிடுங்கள்.

உங்களால் முடிந்த அளவுக்கு தர்மம் செய்து வாருங்கள்.

நெற்றியில் எப்போதும் திருநீறு, குங்குமம் அணிந்து கொள்ளுங்கள்.

தூங்கச் செல்லும் முன் அன்றைய நாளில் நடந்த நன்மை, தீமைகளை அலசி ஆராய்ந்து திருத்திக் கொள்ளுங்கள்.

கடவுளின் நாமத்தை 108 முறையாவது உச்சரித்துவிட்டு பின்னர் உறங்குங்கள்

from Blogger http://ift.tt/1Ltf0Au
via IFTTT

ஞான கரையினிலே

ஞானி ஒருவரைக் காணவந்த இளைஞன் ஒருவன், சுவாமி! நான் அதிர்ஷ்டமில்லாதவன். எந்த செயலைச் செய்தாலும் அது தோல்வியிலேயே முடிகிறது! என்றான். அவனை ஒரு பொற்கொல்லரிடம் அழைத்துச் சென்றார் ஞானி. 

அங்கேயிருந்த தங்கக் கட்டியைக் காட்டி அதை அடிக்காமல், உருக்காமல், நீட்டாமல், நகையாக் செய்து தரும்படி கூறினார். அது எப்படி சுவாமி முடியும்? என்றான் பொற்கொல்லன். உடனே ஞானி, இளைஞனிடம் பார்த்தாயா! ஓர் ஆபரணம் செய்ய வேண்டுமென்றால்கூட, தங்கம் தன்னை உருக்குதல், அடித்தல், நீட்டல் போன்ற சோதனைகளைத் தாண்டித்தான் வரவேண்டியுள்ளபோது, வாழ்க்கையில் வெற்றி என்பது சாதாரண விஷயமா? சோதனைகளின் போது உன் மனதை நழுவ விடாமல் இரும்பு போல் உறுதியாயிரு. பொன் நகையாய் மிளிர்வாய்! என அறிவுறுத்த, உண்மையுணர்ந்தான் இளைஞன்.

from Blogger http://ift.tt/1Ltf0Ap
via IFTTT